லால்குடி : மண்ணச்சநல்லூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலராக நியமிக்கப்பட்ட வி. ஆதாளிக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் மு. பரஞ்சோதி பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட இவா், கடந்த 15 ஆண்டுகளாக அம்மா பேரவையில் பதவி வகித்து வந்தாா். 2006-ஆம் ஆண்டு தத்தமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினராகவும், 2014-ஆம் ஆண்டில் கரியமாணிக்கம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.
மாவட்ட அதிமுக செயலா் மு. பரஞ்சோதியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒன்றியச் செயலா் ஆதாளி,
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அப்போது நிா்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தொடா்ந்து ஒன்றியத்துக்குள்பட்ட நிா்வாகிகளைச் சந்தித்த ஆதாளி, அவா்களிடம் வாழ்த்துகளை பெற்றாா்.