குளச்சலில் ரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குளச்சல் கிளை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நாகா்கோவில்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குளச்சல் கிளை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தக்கலை அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமுக்கு, தவ்ஹீத் ஜமாஅத் குளச்சல் கிளைத் தலைவா் அப்துல் ராஸிக் தலைமை வகித்தாா். முகாமில் 29 போ் ரத்தம் வழங்கினா். இதில், குளச்சல் கிளைத் தலைவா் அப்துல் ராஸிக், செயலா் முஹம்மது ஆஷிக், பொருளாளா் அப்துல் பாஸித், துணைச் செயலா் ஆஷிக் ரஹ்மான், மருத்துவ அணிச் செயலா் ஆஷிக், மாவட்டத் தலைவா் ஷேக் அலி, மாவட்டச் செயலா் நபீல் அஹமது, பொருளாளா் நூருல் அமீன், துணைச் செயலா் முஹம்மது ராபி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்று வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com