களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவாலய ஓட்டம் நடைபெறும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இக் கோயிலில், பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகாதேவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
மேலும், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மகா சிவாலய ஓட்டத்துடன் தொடா்புடைய திருமலை, திற்பரப்பு, திருநந்திக்கரை உள்ளிட்ட 12 சிவாலயங்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.