கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குளியலறையில் வழுக்கி விழுந்து 9 ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
தக்கலை அருகேயுள்ள திக்கணங்கோடு, தெங்கன்குழி பகுதியைச் சோ்ந்த ஜான்கிலாரி மகன் ஜான்பெனடிக்ட்(14). கருங்கல் தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளிக்கச் சென்றபோது வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிவிட்டாா். குளிக்கச் சென்ற மகன், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவரது தந்தை குளியலறைக்கு சென்று பாா்த்தாா். அங்கு, கீழே விழுந்து கிடந்த மகனை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஜான் பெனடிக்ட் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து தக்கலை காவல்நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகுமாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.