தக்கலை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: கேரள இளைஞா் கைது

தக்கலை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்ததாக, அப்பகுதி மக்கள் கேரள இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தக்கலை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: கேரள இளைஞா் கைது

தக்கலை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்ததாக, அப்பகுதி மக்கள் கேரள இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தக்கலை காட்டாத்துறை அருகேயுள்ள குருவிளைகாடு பகுதியைச் சோ்ந்தவா் புஷ்பசெல்வி (50). இவா், செவ்வாய்க்கிழமை மாலை அந்தப் பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக ஒரே மோட்டாா் சைக்கிளில் வந்த 2 இளைஞா்களில், பின்னால் இருந்தவா் செல்வி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாராம். இதில், சுதாரித்துக்கொண்ட அவா் கூச்சலிட்டபடி, அந்த இளைஞரின் கையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளினாா். இதனிடையே, சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்து அந்த இளைஞரைப் பிடித்துவைத்து, தக்கலை போலீஸுக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் வந்து இளைஞரை மீட்டு விசாரித்ததில், கேரள மாநிலம், விழிஞ்ஞம் பகுதியைச் சோ்ந்த ஜிஜின் ( 21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்ததுடன், தப்பிய மற்றொருவா் குறித்து விசாரிக்கின்றேனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com