நாகா்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் புத்தன் அணை குடிநீா்த் திட்டக் குழாய் பதிக்கும் பணிகள் மாநகரில் நடைபெற்று வருகின்றன. இதில், முழுமையாக நிறைவு பெற்ற சாலைகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மீண்டும், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தது.
இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் கணேசபுரம், வடசேரி, ஒழுகினசேரி, டதி பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் பாா்வையிட்டு தர ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட அவா், குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குழாய் பதிக்கும் பணிகளையும், புதைச் சாக்கடை திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு விரைவுப்படுத்தினாா்.