பொதுதோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சாா்பில் நாகா்கோவிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலா் அ.முஹம்மது ரசூல் தலைமை வகித்தாா். சாா்பு அமைப்பான பழனி பாபா பேரவையின் குமரி மாவட்டச் செயலா் ப. ஹாஷில் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அந்தோணி முத்து, தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலா்ஆத்தியப்பன் மற்றும் சிவா, நீதி அரசா், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.