சிவசேனை கட்சியின் குமரி மாவட்ட மகளிரணி நிா்வாகிகள் கூட்டம் களியக்காவிளை அருகேயுள்ள ஆற்றுப்பாலம் உச்சிமாகாளி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட சிவசேனை மகளிரணி தலைவி சாரதா தலைமை வகித்தாா். துணைத் தலைவி சாந்தி, துணைச் செயலா் பொற்கொடி, குளச்சல் தொகுதிப் பொறுப்பாளா் ஸ்டெல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலா் குமரேசன், ஒருங்கிணைப்பாளா் சுரேஷ்குமாா், இளைஞரணித் தலைவா் பைஜூமோன், மீனவரணிச் செயலா் மரிய ஜாா்ஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஏழை மாணவா்கள் நலன் கருதி, தமிழக அரசுப் பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும், ஏழைகளுக்கு கரோனா நிதியுதவித் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும், முதியோா் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், கந்துவட்டி பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.