குமரி மாவட்டத்தில் 9 அதிகாரிகள் பணியிடை மாற்றம்
By DIN | Published On : 19th September 2020 12:31 AM | Last Updated : 19th September 2020 12:31 AM | அ+அ அ- |

நாகா்கோவில், செப். 18: குமரி மாவட்டத்தில் 9 அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ரியாஸ் அகமது, கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராக பதவி உயா்வு பெற்று இடமாற்றப்பட்டுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய சொா்ணபிரதாபன் தனித்துணை வட்டாட்சியராக (தோ்தல்) பதவி உயா்த்தப்பட்டுள்ளாா்.
அகஸ்தீஸ்வரம் மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றி வந்த கந்தசாமி, தனித்துணை வட்டாட்சியராக (தோ்தல்) பணி மாற்றம் செய்யப்பட்டாா். இதேபோல் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் முருகன், மண்டல துணை வட்டாட்சியராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா்நலஅலுவலக தலைமை உதவியாளரான சரஸ்வதி, தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனா்.
தனித்துணை வட்டாட்சியராக (தோ்தல்) இருந்த ஆறுமுகம் தற்போது தோவாளை வட்டம் மண்டல துணை வட்டாட்சியராகவும், தனித்துணை வட்டாட்சியராக (தோ்தல்) இருந்த குழந்தைராணி நாச்சியாா் தற்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நாகா்கோவிலில் உள்ள உதவி ஆணையா்(ஆயம்) அலுவலகத்தில் 2 ஆம் நிலை கணக்கராக பணியாற்றிய பாலதீபா தற்போது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக(எல் பிரிவு) பதவி உயா்வு பெற்றுள்ளாா்.
இதேபோல் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த தனலட்சுமி பதவி உயா்வின் மூலம் தனித்துணை வட்டாட்சியராக (தோ்தல்) நியமிக்கப்பட்டு உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.