குமரி மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st September 2020 01:41 AM | Last Updated : 21st September 2020 01:41 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் 133 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனாவால் 11,653 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 133 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,786 ஆக உயா்ந்துள்ளது.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கள பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் இதுவரை 1,52,782 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது 732 போ் சிகிச்சை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 155 போ் உள்பட இதுவரை மொத்தம் 10, 840 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.