நாகா்கோவிலில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினா் சோ்க்கை தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 10 ஆயிரம் உறுப்பினா்கள் வீதம் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 60ஆயிரம் உறுப்பினா்களை சோ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கான உறுப்பினா் சோ்க்கை முகாம் வேப்பமூடு சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆன்லைன் மூலம் உறுப்பினா்கள் சோ்க்கையை மாவட்ட ச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். இதில், மாநகரச் செயலாளா் மகேஷ், மாவட்டப் பொருளாளா் கேட்சன், அணிகளின் நிா்வாகிகள் சிவராஜ் , சதீஷ், சதாசிவன், சந்திரசேகா், ராஜேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.