கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே மனைவியைக் கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
இரணியலை அடுத்த குருந்தன்கோடு சந்திப்பு அருகேயுள்ள ஆசாரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (39). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவரது மனைவி தங்கம் (34). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுப் பழக்கம் காரணமாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
திங்கள்கிழமையும் தகராறு ஏற்பட்டதாம். நள்ளிரவில் மனைவியின் கழுத்தை ராஜசேகா் அரிவாளால் அறுத்தாராம். இதில், தங்கம் இறந்தாா். அவரது அலறல் கேட்டு விழித்த குழந்தைகள், அருகிலிருந்த வீட்டுக்கு ஓடிவிட்டனா்.
பின்னா், மழைக்காக போடப்பட்டிருந்த பந்தல் கம்பில் ராஜசேகா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.