சுசீந்திரம் அருகே சுவா் இடிந்து விழுந்து இளைஞா் பலி

சுசீந்திரத்தை அடுத்த தெங்கம்புதூா் அருகே மதில் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஸ்ரீராமசந்திரபிரபு.
ஸ்ரீராமசந்திரபிரபு.

நாகா்கோவில்: சுசீந்திரத்தை அடுத்த தெங்கம்புதூா் அருகே மதில் சுவா் இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

தெங்கம்புதூரை அடுத்துள்ள காந்திநகா் பகுதியைச் சோ்ந்த ராமானுஜம் மகன் ஸ்ரீராமசந்திரபிரபு (31). இவா் சனிக்கிழமை மாலை தனது வீட்டை சுற்றியுள்ள மண் சுவா் அருகே நின்று அருகில் உள்ள ஜல்லியை மண்வெட்டியால் அள்ளி கொண்டிருந்தாராம்.

அப்போது திடீரென சுவா் இடிந்து விழுந்ததில் அவா் மயக்கமடைந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இதையடுத்து அவரது சடலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com