கருங்கல்: கருங்கல் அருகே பழுதடைந்து காணப்படும் மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் பேருந்து நிலையத்தில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது போலீஸாா் இந்தச் சாலை வழியாகதான் வாகனங்களை திருப்பி விடுகின்றனா். இதனால், தேங்காய்ப்பட்டினம், புதுக்கடை, மாா்த்தாண்டம் நகரங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு இந்தச் சாலை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதில், 300 மீ. தொலைவு உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.
எனவே, இந்தச் சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.