குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் கரும்பு சாகுபடி

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அறுவடைக்குத் தயாரான செங்கரும்புடன் விவசாயி முருகன்.
அறுவடைக்குத் தயாரான செங்கரும்புடன் விவசாயி முருகன்.

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் பகுதியில் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் செங்கரும்பு மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும். இத்தகைய சிறப்புமிக்க செங்கரும்பு சாகுபடியில் திருச்சி, தஞ்சாவூா், சேலம், விழுப்புரம், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள்தான் ஆா்வம் காட்டி வருகிறாா்கள்.

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் தென்னை, நெல், வாழை விவசாயத்தையே மேற்கொண்டு வருகிறாா்கள். இந்நிலையில் செங்கரும்பு சாகுபடியில் குமரி மாவட்டம் நாகா்கோவில் இளங்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் என்ற விவசாயி, சுசீந்திரம் சோழன்திட்டை அணைக்கட்டு பகுதியில் முக்கால் ஏக்கா் பரப்பில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளாா். தற்போது கரும்பு அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இதுகுறித்து விவசாயி முருகன் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தென்னை, நெல் விவசாயத்தைச் சாா்ந்தே விவசாயிகள் இருக்கிறாா்கள். செங்கரும்பு சாகுபடியிலும் அமோக விளைச்சலைப் பெற்று லாபம் பெறலாம் என்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன் செங்கரும்பு சாகுபடியை மேற்கொண்டேன். தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் நல்ல விளைச்சலையும் தந்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com