

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டம் நடத்த தொழிற்சங்கக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் விரிவடைந்த மாவட்டச் செயற்குழு கூட்டம், நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் சிஐடியூ அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அமுதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.சரஸ்வதி, பொருளாளா் சரோஜினி, சிஐடியூ மாவட்ட துணைத்தலைவா் பி.இந்திரா ஆகியோா் பேசினா்.
இதில், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை, பணியாளருக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வரும் 20, 21 ஆம் தேதிகளில் முதல்கட்டமாக அனைத்து வட்டாரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது.
பின்னா், ஜன. 29 ஆம் தேதி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டமும், பிப். 5இல் மூன்றாம் கட்டமாக சென்னையில் முற்றுகை போராட்டமும் நடத்த தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.