திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் குலசேகரம் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தனா்.
பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க குலசேகரம் வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமையில், மாவட்டச் செயலா் ஆா். ரெவி, பொருளா் சதீஷ், குலசேகரம் கூட்டுறவு வங்கி உறுப்பினா் பஷீா் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.