குளச்சலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ், ஞாயிற்றுக்கிழமை குளச்சல் அண்ணா சிலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
குளச்சலில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குளச்சல் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ், ஞாயிற்றுக்கிழமை குளச்சல் அண்ணா சிலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியது: கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிக்காத அளவில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏ.வி.எம். கால்வாய் தூா்வாரி நிலத்தடிநீா் மேம்பட ஏற்பாடு செய்வேன். தற்போது உள்ள காமராஜ் பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்படும் என்றாா் அவா்.

வாக்கு சேகரிப்பின்போது, காங்கிரஸ் நகரத் தலைவா் சந்திரசேகா், மாநில செயற்குழு உறுப்பினா் யூசுப்கான், குருந்தன்கோடு ஊராட்சி முன்னாள் ஒன்றியத் தலைவா் திருமேனி உதயம், ஜெயகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரத் தலைவா் புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜரெத்தினம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் நஸீா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com