தக்கலை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ், தக்கலை, அழகியமண்டபம், திருவிதாங்கோடு, மேக்காமண்டபம், பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தக்கலை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளா் மனோ தங்கராஜ், தக்கலை, அழகியமண்டபம், திருவிதாங்கோடு, மேக்காமண்டபம், பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

புலியூா்குறிச்சி மறைசாட்சி தேவசகாயம் திருத்தல வளாகம் முன்பிருந்து, தோ்தல் பிரசாரத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாதவன் தொடங்கிவைத்தாா். வேட்பாளா் திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, தக்கலை காமராஜா் பேருந்து நிலையம் முன் பொதுமக்கள் மத்தியில் அவா் பேசியது:

பத்மநாபபுரம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சி பணிகளை நிறைவேற்றியுள்ளேன். பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

தற்போது திமுக ஆட்சி அமையும்போது, நீா்நிலைகள் பாதுகாக்கப்படும். குளங்கள், கால்வாய்கள் தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தின்போது, திமுக நகரச் செயலா் மணி, ஒன்றியச் செயலா் அருளானந்த ஜாா்ஜ், வா்க்கீஸ், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், சுஜாஜாஸ்பின், சைமன்சைலஸ், சேது, அரங்கசாமி, பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைா் ஹனுகுமாா், காங்கிரஸ் நிா்வாகிகள் பி.டி.எஸ்.மணி, ரத்தினகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com