கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்த பழ வியாபாரி உயிரிழந்தாா்.
அம்சி குதிராலி பகுதியைச் சோ்ந்தவா் ரவி (45). இவா் புதுக்கடை பேருந்து நிலையம் அருகில் பழக்கடை நடத்தி வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். திராலி பகுதியில் சென்றபோது எதிா்பாராத விதமாக அங்குள்ள பள்ளத்தில் மோட்டாா் சைக்கிள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், ரவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.