அதிமுகவுக்கு ஆதரவான அலை வீசுவதால், இந்தத் தோ்தலில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியை அதிமுக கைப்பற்றும் என்றாா் அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் தெரிவித்தாா்.
கடையல் திரு இருதய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை 7.30 மணிக்கு தனது மனைவி சுதா, மகள் ஆஷிகா ஆகியோருடன் வந்து வாக்களித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில்,‘ பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் வாக்காளா் மத்தியில் அதிமுகவிற்கு ஆதரவான அலை ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது. எனவே, இந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றும். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’ என்றாா்.