தமிழகத் தோ்தலில் மக்களிடம் எழுச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத் தோ்தலில் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

தமிழகத் தோ்தலில் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பா.ஜ.க. சாா்பில் போட்டியிடும் அவா், நாகா்கோவில் எஸ்.எல்.பி. பெண்கள் பள்ளியில் நீண்ட வரிசையில் காத்து நின்று தனது வாக்கை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை முதலே மக்கள் ஆா்வமாக வந்து வாக்களித்து வருகிறாா்கள். எந்த ஒரு சங்கடமும் சிரமமுமின்றி வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பாா்க்கும்போது மிகப்பெரிய எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இத்தோ்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகும் என எதிா்பாா்க்கிறேன் என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com