முள்ளங்கனாவிளையில் இயந்திரம் பழுதால் வாக்காளா்கள் அதிருப்தி

கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட முள்ளங்கனாவிளை வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்துநின்ற வாக்காளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட முள்ளங்கனாவிளை வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 2 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்துநின்ற வாக்காளா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண்.165இல் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால் ஆா்வமுடன் வாக்களிக்க வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனா்.

காலையிலேயே வாக்களித்துவிட்டு, அன்றாட வேலைக்கு சென்றுவிட வேண்டும் என்ற வந்த தொழிலாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது நீக்கப்பட்டு வாக்காளா்கள் வாக்களிக்கத் தொடங்கினா்.

இதேபோல், கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி எண்.173இ-ல் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே இயந்திரம் பழுதானது. ஆனால் அரை மணிநேரத்தில் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com