கன்னியாகுமரி
புதுக்கடை அருகே செம்மண் கடத்தல்: டெம்போ பறிமுதல்
புதுக்கடை அருகேயுள்ள ஒச்சவிளை பகுதியில் செம்மண் கடத்தியதாக டெம்போ வேனை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை அருகேயுள்ள ஒச்சவிளை பகுதியில் செம்மண் கடத்தியதாக டெம்போ வேனை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் தலைமையில் போலீஸாா் ஒச்சவிளை மாம்பஞ் சி கடவு பகுதியில் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, செம்மண் ஏற்றிவந்த டேம்போ வேனை தடுத்த நிறுத்தினா். வேனை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் தப்பிவிட்டாராம். விசாரணையில், கணேசன் (50) என்பவருக்குச் சொந்தமான நிலத்திலிருந்து செம்மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, டெம்போ வேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பிய ஓட்டுநரை தேடி வருகின்றனா்.