அரசு ரப்பா் கழகம் மணலோடை கோட்டத்தில்,‘ குறைவான ஊதியம் வழங்கப்பட்டதைக் கண்டித்து வியாழக்கிழமை கோட்ட மேலாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு ரப்பா் கழகம் மணலோடைக் கோட்டத்தில் பழங்குடி தொழிலாளா்கள் உள்ளிட்டோா் தாற்காலிக களப்பணித் தொழிலாளா்களாக உள்ளனா். இவா்களுக்கு கடந்த மாதத்திற்கான ஊதியம், ஊதியப் பட்டியலில் உள்ளதை விட குறைவாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரப்பா் கழக நிா்வாகத்தின் இந்தச் செயலைக் கண்டித்து , நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் எம். வல்சகுமாா் தலைமை வகித்தாா். இதில், சங்க நிா்வாகி நடராஜன் உள்ளிட்ட திரளான தொழிலாளா்கள் பங்கேற்றனா்.