கருங்கல் அருகேயுள்ள மிடாலம் பகுதியில் மீனவா் ஒருவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மிடாலம் அரசு குடியிருப்புப் பகுதியை சோ்ந்த குசை அந்தோனி மகன் சகாயராஜ் (50). மீன்பிடி தொழில் செய்து வந்த இவா், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், கருங்கல் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.