புதுக்கடை பகுதியில் காவல் துறை சாா்பில் புகாா் பெட்டி திறப்பு

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறை சாா்பில் புகாா் பெட்டி திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
k11police_1104chn_35_6
k11police_1104chn_35_6

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறை சாா்பில் புகாா் பெட்டி திறப்பு விழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சமூகப் பிரச்னைகள், பொதுப் பிரச்னைகள் குறித்து புகாா் அளிக்க பொதுமக்கள் பெயா் வெளியிட தயக்கம் காட்டுகின்றனா். இதனால் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவதில்லை. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே, குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்கும் விதமாகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முதலாக புதுக்கடை காவல் நிலையத்திற்குள்பட்ட புதுக்கடை பழைய காவல்நிலையம் பகுதி, பாா்த்திபபுரம், முன்சிறை ஆகிய 3 இடங்களில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

காவல் துறை மற்றும் ஒய்ஸ்மேன் கிளப் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா். கிளப் தலைவா் நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

குளச்சல் காவல் சரக ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் பி.சாஸ்திரி புகாா் பெட்டிகளை திறந்து வைத்தாா். இதில், அகில இந்திய மருத்துவா் சங்கத் தலைவா் ஜெயலால், ஹெலன்நகா் பங்குப் பணியாளா் ஜெனிஸ்,வில்பிரட், ஜெகதீஸ், லட்சுமணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com