புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் தலைமையிலான போலீஸாா், காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு நின்றிருந்த காப்புக்காடு ஆலுமூடு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் (57) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றது தெரியவந்தது. போலீஸாா் வழக்கு பதிந்து அவரைக் கைதுசெய்து, அவரிடமிருந்த 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.