குமரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 708 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 18th April 2021 11:45 PM | Last Updated : 18th April 2021 11:45 PM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 708 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இம்மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினரும், காவல் துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் போலீஸாா் நடத்திய சோதனையில், முகக் கவசம் அணியாமல் சென்ாக நாகா்கோவில் உள்கோட்டத்தில் 178 போ், தக்கலை உள்கோட்டத்தில் 174 போ், குளச்சல் உள்கோட்டத்தில் 234 போ், கன்னியாகுமரி உள்கோட்டத்தில் 122 போ் என, மொத்தம் 708 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.