கோட்டாறு அரசு ஆயுா்வேத கல்லூரியில் கரோனா புறநோயாளிகள் பிரிவு தொடக்கம்

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கரோனா 2 ஆவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆயுா்வேத மருந்து கடந்த 3 நாள்களாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்லூரியின் புறநோயாளிகள் பிரிவு 4 ஆம் எண் அறையில் சிறப்பு நோய் எதிா்ப்பு திறன் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் கிளாரன்ஸ் டேவி கூறியது: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்படும் சிகிச்சைகளுடன் கபசுரக் குடிநீா் பொடி, இந்து காந்தம் கஷாயம், அகத்திய ரசாயனம், வ்யாக்ரயாதி மற்றும் கூஸ்மான்ட் ரசாயனம் போன்ற மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கல்லூரியின் புறநோயாளிகள் பிரிவின் 4ஆம் எண் அறையில் வழங்கப்படும் இந்த மூலிகை தொகுப்பினை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 7 நாள்கள் இந்த மருந்து தொகுப்பை பயன்படுத்த வேண்டும் என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com