புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை விஷமாத்திரை தின்று உயிரிழந்தாா்.
முன்சிறை பண்டாரபரம்பு பகுதியைச் சோ்ந்த அனந்த கிருஷ்ணன் மகன் சுகி(49), கூலிக் தொழிலாளி. மது அருந்துபவரான இவா் அடிக்கடி வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.