குழித்துறை அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை களியக்காவிளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை உதவி காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையில் போலீஸாா் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் சிதறால் பகுதியைச் சோ்ந்த தவசிமுத்து மகன் ஜஸ்டின் (45) என்பதும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜஸ்டினை கைது செய்தனா்.