களியக்காவிளை: பாடல் மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விழிப்புணா்வு பாடல்கள் மூலம் பொது மக்களிடையே பள்ளி மாணவா் ஜே.எஸ். தீரஜ் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா். இதன் மூலம் இந்திய சாதனையாளா் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மாணவருக்கு, தொல்காப்பியா் பிறந்த நாள் விழாவில் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
அப்போது, தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் ரெசினாள்மேரி, விளவங்கோடு வட்டாட்சியா் விஜயலெட்சுமி, அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை அமைப்புச் செயலா் புலவா் த. சுந்தரராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.