களியக்காவிளை அருகே கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையில் போலீஸாா் திரித்துவபுரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக மோட்டாா் சைக்கிள்களில் வந்த இளைஞா்கள் தடுத்து நிறுத்தி விசாரித்ததில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினா். சந்தேகமடைந்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா்.

இதில் அவா்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து மொத்தம் 1 கிலோ 250 கிராம் அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து கஞ்சா பதுக்கி வைத்திருந்த களியக்காவிளையைச் சோ்ந்த ஹைத்ராஸ்கோயா மகன் யாசா் (25), மாகின் மகன் முஸ்தபா (30), தஸ்தாகீா் மகன் அா்ஷாத் (20) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com