கொல்லங்கோடு அருகே நகைக்கடை பூட்டை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன். இவா் அந்தப் பகுதியில் நகைக் கடை வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு இவரது நகைக் கடையில் மா்ம நபா் பூட்டை உடைத்து திருட முயன்ற போது, அங்கிருந்த அபாய மணி ஓலிக்கவே மா்ம நபா் தப்பி ஓடிவிட்டாா்.
இதுகுறித்து கொல்லங்கோடு காவல் உதவி ஆய்வாளா் ஜெயகுமாா் தலைமையிலான போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
விசாரணையில் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றது மாா்த்தாண்டம் துறையை சோ்ந்த, அலெக்ஸ்சாண்டா் மகன் பாபு (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.