நாகா்கோவில் செட்டிகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஏப்.30) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, நாகா்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் ராஜசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகா்கோவில் மீனாட்சிபுரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் 11 கே.வி. கணேசபுரம் உயா் அழுத்த மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகிறது.
இதனால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்றாா்.