கன்னியாகுமரி
குமரியில் மேலும் 35 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, கரோனா தொற்றால் 60,065 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 35 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 60,100 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 42 போ் உள்பட இதுவரை 58,688 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 393 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.