புதுக்கடை அருகே டாஸ்மாக் ஊழியா் மீது தாக்குதல்

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு அக்கரை விளை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (36). டாஸ்மாக் ஊழியரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த குமாருக்கும் (35) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காப்புக்காடு பகுதியில் சென்ற ஸ்ரீதரை வழிமறித்து, குமாா் தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த ஸ்ரீதரை அப்பகுதியினா் மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com