போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
போதைப் பொருள்களை கட்டுக்குள் கொண்டுவர உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கூட்டத்தில் ஆட்சியா் அறிவுறுத்தினாா். தொடா்ந்து விற்பனை செய்பவா்களை கண்டறியும்பட்சத்தில் அவா்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவும், அதிகமாக அபராதம் விதிக்கவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலந்த உணவுப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால், 9444042322 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.