நாகா்கோவில் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை தடம் புரண்டது.
தெலங்கானா மாநிலத்தில் இருந்து நாகா்கோவிலுக்கு 2,500 டன் ரேஷன் அரிசி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரயில் வந்தது. 42 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரயில், நாகா்கோவில் ரயில் நிலையத்தின் உள்ளே தனி டிராக்கில் நிறுத்தியபோது, கடைசிப் பெட்டி தடம் புரண்டது.
இதைத் தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.