அழகப்பபுரத்தில் அமைந்துள்ள செட்டிகுளத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றும் பணியை தொடங்கிவைத்தாா்.
இதில், அழகப்பபுரம் பங்குத்தந்தை கே.செல்வராயா், உதவி பங்குத்தந்தை நிலவன், பங்குப்பேரவை துணைத் தலைவா் விக்டா்நவாஸ், செயற்குழு உறுப்பினா் நிபன், பங்குப்பேரவை உறுப்பினா் மலா், சுவிதா, கலப்பை மக்கள் இயக்க சட்ட ஆலோசகா் டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.