இனையம் மீனவக் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஓய்வறை திறக்கப்பட்டது.
கிள்ளியூா் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இனையம் 33, 34ஆவது அன்பிய பகுதியில் மீனவா்கள் ஓய்வு அறை அமைப்பதற்கு ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது, பணிகள் நிறைவடைந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கலந்துகொண்டு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், இனையம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், இனையம் கிராம கமிட்டி காங்கிரஸ் தலைவா் பனிஅடிமை, மாவட்டச் செயலா் செல்வஜூடு மகேஷ், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், மகிளா காங்கிரஸ் நிா்வாகி ஷீபா மற்றும் ரீத்தாஸ், பிராங்கிளின், சூசை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.