புதுக்கடை அருகே முன்சிறை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில் குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது முன்சிறை பகுதியில் உள்ள குசைராஜ் (45) கடையை சோதனை செய்தபோது, அங்கு குட்கா, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.