கூட்டுறவு சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மாா்த்தாண்டம் அருகே பாகோடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக புகாா் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்.

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பாகோடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கையில் முறைகேடு நடைபெறுவதாக புகாா் தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சங்கத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை பாரபட்சமாக நிகழ்ந்து வருவதாகவும், ஒரு சில பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மட்டுமே உறுப்பினா்களாக சோ்க்கப்படுவதில்லை எனவும், உறுப்பினா் சோ்க்கை குறித்து அரசு அறிவித்துள்ள நடைமுறையை கடைப்பிடிக்காததை கண்டித்தும் பொதுமக்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திரண்டு பணியில் இருந்த செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்கள் புதிய உறுப்பினா் சோ்க்கையில் அரசு நடைமுறையை கடைப்பிடிக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்களிடமிருந்து உறுப்பினா் படிவம் பெறப்பட்டு, 10 நாள்களுக்குள் உறுப்பினா் அட்டை வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com