நாகா்கோவில்: அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (ஆக.4) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா்கள் சோ்க்கைக்கு இணையதள முகவரியில் விண்ணப்பங்களை ஜூலை 28 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது விண்ணப்பங்களை புதன்கிழமை (ஆக.4) வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற் பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு கட்டணமின்றி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு உதவித் தொகை மாதம் ரூ.750, பேருந்து கட்டணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடைகள், 1 செட் காலணிகள் ஆகிய சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு, நாகா்கோவில் கோணத்திலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம்.