கருங்கல் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சாா்பில் கரோனா தடுப்பு வாரம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, சித்த மருத்துவப் பிரிவு மருத்துவா் டாபினி மோளி தலைமையில் மருந்தாளுனா் சிதம்பரம், மருத்துவமனை பணியாளா் மேரி ஸ்டெல்லா ஆகியோா் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினா். இதியில் திரளான மக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.