பத்மநாபபுரம் அருகே மருந்துகோட்டை எல்லை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ராகு கால துா்க்கா பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருந்துகோட்டை மலையில் அமைந்துள்ள எல்லை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு பால், இளநீா், தேன், களபம், சந்தனம், போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து துா்க்கா தேவிக்கு ராகுகால பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் பங்கேற்றனா். மாலையில் பிரதோஷ வழிபாடு மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.