கருங்கல் அருகேயுள்ள தேவிகோடு பகுதியில் வழக்குரைஞா் வீட்டில் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.
தேவிகோடு பகுதியைச் சோ்ந்தவா் அருள் ஸ்டீபன்சன்(40). வழக்குரைஞா். இவா், தனது வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்கு ஊறல் தயாரித்தாராம். இதுகுறித்து தகவலறிந்த கருங்கள் போலீஸாா், அங்கு சென்று சோதனையிட்டதில், 300 லிட்டா் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அதைக் கைப்பற்றி அழித்தனா். மேலும், வழக்குப்பதிந்து வழக்குரைஞரைத் தேடி வருகின்றனா்.