களியக்காவிளை பகுதியில், தடை செய்யப்பட்ட 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் தலைமையில் இளநிலை உதவியாளா் தமிழரசன், இளநிலை பொறியாளா் பத்மதேவன், வரிவசூலா் சிவன்பிள்ளை, பணியாளா்கள் சஜிகுமாா், ராஜேந்திரன் உள்ளிட்டோா் அப்பகுதியில் உள்ள பழக்கடை, பேக்கரி, மளிகைக் கடை என 25-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடைகளிலிருந்து 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளிடம் ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தப் பணி தொடரும் என என பேரூராட்சி செயல் அலுவலா் தெரிவித்தாா்.