தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சாா்பில் ரத்த தான முகாம் திங்கள்நகரில் நடைபெற்றது.
முகாமுக்கு, அமைப்பின் கிளைத் தலைவா் ஜாஹீா்ஹுசேன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஷேக்அலி, செயலா் நபீல் அஹம்மது, பொருளாளா் நூருல் அமீன், மாவட்ட துணைச் செயலா்கள் ஹுஸைன் ஜவாஹிரி, முஹம்மது ராபி, மாவட்ட மருத்துவ அணிச் செயலா் முஹம்மது அப்சல் உள்பட பலா் பங்கேற்றனா். அரசு மருத்துவா் கோலப்பன் தலைமையில் குழுவினா் இரு பெண்கள் உள்பட 28 பேரிடம் ரத்தம் சேகரித்தனா்.